அடுத்த 21 நாட்களுக்கு மக்களுக்கு அத்தியாவசியமான இவை எல்லாம் செயல்படும்
ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.
அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி
உணவு, மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது.
தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது நடவடிக்கை.
பிப்.15க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.